Wednesday, January 19, 2011

கண்ணன் திருவடி எண்ணுக மனமே

கண்ணன் திருவடி என்ணுக மனமே
திண்ணம் அழியா வண்ணம் தருமே

(கண்ணன்)

தருமே நிதியும் பெருமை புகழும்
கருமாமேனிப் பெருமானிங்கே

(கண்ணன்)

இங்கே அமரர் சங்கம் தோன்றும்
மங்கும் தீமை பொங்கும் நலமே
நலமே நாடிற் புலவீர் பாடீர்
நிலமா மகளின் தலைவன் புகழே

(கண்ணன்)

புகழ்வீர் கண்ணன் தகை சேரமரர்
தொகையோடசுரர் பகை தீர்ப்பதையே
தீர்ப்பான் இருளைப் போர்ப்பான் கலியை
ஆர்ப்பாரமரர் பார்ப்பார் தவமே

(கண்ணன்)

தவறாதுணர்வீர் புவியீர் மாலும்
சிவனும் வானோர் எவரும் ஒன்றே
ஒன்றே பலவாய் நின்றோர் சக்தி
என்றும் திகழும் குன்றாவொளியே

No comments: