Saturday, December 6, 2008

பெட்ரோல் சேமிப்பு - எனது மிதிவண்டி

நான் எனது அலுவலகத்துக்கு பைக் அல்லது காரில் செல்வது வழக்கம். வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் இடையே 3 கிமீ.

அப்பொழுது பெட்ரோல் விலை 50ரூபாய் ஆக இருந்தது. குருடு ஆயில் விலை அதிகம் ஆனவுடன் எனது மாத செலவுகள் அதிகமானது.

இதை கட்டுபடுத்த என்ன செய்யலாம் என்று யோசனை செய்தேன். அதற்க்கு கிடைத்த விடை தான் மிதிவண்டி(சைகில்).

எனது பணி காரணமாக, நடை பயிர்ச்சி செய்யமுடியவில்லை. எனது உடல் dஎடையும் குறைக்க முடியவில்லை.

சாப்பிட்டோம் வேலை செய்தோம் தூங்கினோம் என்று இருந்தேன்.
மாத செலவுகள் கட்டுபடுத்த நினைத்த போது தான்இந்த ஞாபகம் வந்தது.

எனது மனைவிடம் ஆலோசனை செய்தேன், மிதிவண்டி வாங்க வேண்டாம்,அதை கொஞ்ச நாள் தான் ஓட்டுவீர்கள் அதற்க்கு பின்பைக் அல்லது காரில் அலுவலகம் செல்ல ஆரம்பித்து விடுவீர்கள், அதனால் மிதிவண்டி வாங்குவதே வீண் செலவு என்று சொன்னார்.

எனது முடிவில் உறுதியாக இருந்தேன். மாத செலவு குறையவும், உடல் ஆரோகியத்துக்கும் , காற்று மாசு படாமல் இருக்கவும்மிதிவண்டி வாங்க முடிவு செய்து விட்டேன்.

மிதிவண்டி கடைக்கு சென்று, கீர் வண்டி வாங்கினேன்.

முதலில் அலுவலகம் செல்ல கூச்சமாக இருந்தது. என்னை பார்த்தவர்கள் பார்வையில் ஒர் ஆச்சர்யம். எனது நண்பர்கள்சிலர் என்னை பாராட்டிணார்கள். சிலர் கிண்டல் செய்தனர்.

ஒரு மாதம் சென்றது. மாதம் ரு 300-500 வரை செலவு குறைந்தது. இரண்டு மாதத்தில் 3கிலோ எடையும் குறைந்தது.



என்னை மாதிரி அலுவலகம் அருகே வீடு இருப்பவர்கள், நடந்தோ அல்லது மிதிவண்டி மூலம் அலுவலகம் சென்றால்
1 உங்கள் உடல் நலத்தையும் பாதுகாக்கலாம்
2 பெட்ரொல் செலவு குறைக்கலாம்.
3 குருடு ஆயில் விலை ஏறாமல் இருக்க நாமும் பங்கு அளிக்கலாம்.
4 காற்று மாசு படாமல் இருக்கும்.


நன்றி மிதிவண்டி.

Sunday, November 30, 2008

எனது கிராம வாழ்க்கை

நான் பிறந்த ஊர் ஒரு கிராமம், ஆரோகியமான ஒரு சூழ்நிலை.எங்கள் வீடு ஒரு தோட்டத்தில் இருக்கிறது.என் அப்பா அம்மா இருவரும் கடின உழைப்பாளர்கள்.என் தோட்டம் கொஞ்சம் பெரியது என்பதால், எப்பொழுதும் 4-5 பேர் வேலைக்கு இருப்பார்கள்.
எங்கள் ஊர் மிகவும் அமைதி யாக இருக்கும். நல்ல காற்று, நல்ல குடி நீர் கிடைக்கும். மண் சுத்தமாக இருப்பதால் வெறும் காலால் நடந்து செல்வேன்.நகரம் மாதிரி கொசு தொல்லை, கரைப்பான் தொல்லை இருக்காது. சிக்னல் தொல்லை, வாகன சப்தம்தொழில்சாலை சத்தம் இருக்காது. பறவை,மாடு ஆடு சப்தம் மட்டும் கேட்கும்.
மிக பசுமயான காய், கீரை, கருவேப்பில்லை ,,,, மட்டுமே உணவுக்கு அம்மா பயன் படுத்துவர்கள்.எங்கள் தோட்டத்தில் காய் இல்லை என்றாள் கவலை இல்லை. எனது உறவினர் தோட்ட ங்கள் அருகில் இருக்கிறது. அங்கு இருந்து கிடைக்கும்.காய் கரி அதிகம் இருந்தால் மாமா, பெரியம்மா தோட்டத்துக்கு கொடுப்போம். என் அப்பா ஒரு சிறந்த விவசாயி. சும்மா ஒரு நாள் இருக்க மாட்டார். தக்காளி, கத்தரி, வெங்காயம்,மக்கா சோளம், பப்பாளி என்று பல வகையான விவசாயம் செய்வார்கள்.அவரது விவசாய நுணுக்கங்கள்பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும்.
எனது தாத்தாவுக்கும் எப்பொழுது எந்த பயிர் விவசாயம் செய்ய வேண்டும் என்று தெரியும். நான் சிறுவனாக இருக்கும் போது என்னை அவருடன் தோட்டத்துக்கு அழைத்து செல்வார். பல நுணுக்கங்கள் சொல்லி கொடுப்பார்.எனது அப்பா சிறந்த விவசாயி என்பதால் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்வார்கள்.
எங்கள் கிராமம் ஒரு தொழில் நகரம் அருகில் இருப்பதால் யாரும் தோட்ட வேலைக்கு வரமாட்டார்கள். அங்கு நிழலில் வேலை செய்வததாலும் நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதால் யாரும் வெய்யிலில் வேலை செய்ய விரும்ப மாட்டார்கள். நானும் கூட.
எனது தந்தை மேலா ன்மை மிகவும் சிறப்பாக செய்வார். எனக்கு பாசலின் என்ற கலை கொல்லி மருந்து நீரில் கலக்கும் வேலை. எனது அம்மா ஆட்கள்லுக்கு உணவு மற்றும் காப்பி செய்யும் வேலை.
ஆனால் இன்று அனைவரும் படிக்க தொடங்கியதால்(என்னையும் சேர்த்து) அதனால் ஆடு மாடு பராமரிக்க ஆட்கள் இல்லை. கூலி 150 ரூபாய் ஆகிவிட்டது.வெங்காயம் அதே ரூபாய் 2 தான். எப்படி விவசாயம் செய்ய முடியும். மக்கள் முட்டாள் தனத்தால்/வயிறுக்கும் மரங்கள் வெட்ட படுகின்றது.
இந்த தலைமுறைத்தான் வேலை செய்யும் கடைசி தலைமுறையாக இருக்கும்.

Tuesday, October 21, 2008

விவசாயம் வளர ?

விவசாயம் செய்ய யாரும் முன்வருவது இல்லை. வெயிலில் காய வேண்டும் என்பதை விட மற்ற காரணங்கள் பல உள்ளன.

1. இதை செய்பவருக்கு சமுதாயத்தில் மரியாதை (ஸ்டேடஸ்) இல்லை.
2. கூலி,உரம் மற்றும் தேவை யான பொருட்கள் விலை ஏறி விட்டது.ஆனால் விவசாய பொருள் விலை மட்டும் ஏறவே இல்லை. இதனால் லாபம் இல்லை.
3. மரத்தை வெட்டி விடுவதால் மலை இல்லை. அதனால் நீர் மட்டம் குறைந்து விட்டது
4. பெண் கொடுக்க யாரும் முன் வருவது இல்லை.
5. இதில் வேலை செய்வது கடினம் என்று யாரும் வேலைக்கு வருவது இல்லை


எடுத்துக்காட்டாக எனது சிறு வயதில் ஒரு நாள் கூலி 5 ரூபாய். வெங்காயம் 3-5 ரூபாய் கிலோ. இப்பொழுது கூலி 200 ரூபாய். ஆனால் வெங்காயம் அதே 5 ரூபாய். யார் விவசாயம் செய்வார்கள்?

இந்த தலைமுறையில் எங்கள் ஊரில் யாரும் இல்லை. அனைவரும் நகரத்துக்கு சென்று விட்டனர்.

இப்படி நடந்தால் நகரத்தில் மக்கள் தொகை அதிகம் ஆகிவிடும். இதனால் நகரத்தில் பல இன்னல்கள்.(தண்ணீர், காற்று மாசு படிந்த்து விட்டது, கொசு கரைப்பான் தொல்லை)


தண்ணீர் பிரச்னை இல்லை என்றால் விவசாயம் மாதிரி ஒரு நிம்மதியான வாழ்க்கை கிடையாது.

சுத்தமான தண்ணீர் கிடைக்கும்
சுத்தமான காற்று கிடைக்கும்
வேலை பழு கிடையாது
Traffic zam கிடையாது
Fresh காய்கறி கிடைக்கும்
நமக்கு தேவையான காய்கறிகளை நமது தோட்டத்தில் பச்சை தன்மை
குறையாமல் பறித்து கொள்ளலாம்

மூலிகை செடிகள்
1. துளசி
2. சிறிய நங்கை
3. கற்பூர வள்ளி
4. தூது வாளை
5. கரிசாலை

மரங்கள்
1. நெல்லி
2. மா
3. முருங்கை
4. சீதா பழம்


இதை விட்டு விட்டு நகரத்தில் இருந்தால் நரகம் தான்.
எல்லா நோய்கலுக்கும் மருந்து சாப்பிட்டு உடலை கெடுத்து கொல்ல வேண்டியது தான்.

அதனால் நம் உடல் நலம் மன நலம் காக்க கிராமம் தான் சிறந்தது.

விவசாய குடும்ப்பதில் இருந்து நகரத்தில் இருப்பவர்கள் மீண்டும் விவசாயம் செய்ய வேண்டும்.
அரசாங்கமும் விவசாயம் செழிக்க விவசாய பொருளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும்.

பண வீக்கத்தை குறைத்து எல்லா பொருள் விலைகலும் குறைய வேண்டும்.
கிராமஙகள் தான் நமது நாட்டின் முதுகு எலும்பு என்பதை நாம் மறக்க கூடாது.

எப்படி நம் நாட்டுக்காக ரணுவ வீரர்கள் இருக்கிறார்களோ, அதை போல விவசாயிகள்நமது உடலுக்காக/பசிக்காக விவசாயம் செய்கிறார்கள்.

அதனால் நாம் விவசாயம் வளர படு பட வேண்டும்.
மரம் நட நாம் உதவி செய்ய வேண்டும்.

மழை நன்றாக பெய்தால் விவசாயம் வளரும். நகரத்தில் இருப்பவர்களுக்குநல்ல காய் கரி கிடைக்கும்.

எல்லாரும் வேர்வை சிந்தாமால் வேலைசெய்ய நினைப்பததால், விவசாயத்துக்கு மதிப்பு இல்லை.

ஒரு நாள் விவசாயத்துக்கு நல்ல மதிப்பு வரும் என்பது நல்ல நம்பிக்கை.

இப்படி ஒருவரும் விவசாயம் செய்யவில்லை என்றால் இளநீர் 100 ரூபாய் க்கு விற்க நேரிடும். மற்றும் தேவை யான கீரை, மூலிகை, தக்காளி, வெங்காயம் விலைகள் எவ்வளவு ஆகும் என்று சொல்ல முடியாது.

அரசாங்கம் வோட்டு மட்டும் மனதில் வைத்து திட்டம் இடுவதால் தொலை நோக்கு பார்வை இருப்பது இல்லை. விவசாயம் வளர ஆக்கப் பூர்வ முடிவு எடுப்பது இல்லை. தண்ணீர்க்காக உண்ணாவிரதம் இருப்பதை விட்டு விட்டு, மரம் வளர்க்க யாரும் முன்வருவது இல்லை.

அரசு அதிகரிகள் சுயநலம் காரணமாக இன்று விவசாய நிலம் ஸைட் போட்டு வீட்க படுகின்றது. தொழில்வளர்ச்சியும் விவசாய வளர்ச்சியும் சமமாக இல்லை. விருதுகள் விலை ஆகின்றது.


அரசங்கம் அறிவிக்கும் சலுகைகள் விவசாயிகலுக்கு சென்று அடைவது இல்லை. அரசு அதிகாரிகள் அவர்கள் பாக்கட்டில் போட்டு சென்று விடுகிறார்கள்.

இதனால் அரசாங்க சழுகைக்கலை நம்ப முடியாது.

விவசாயத்தை வளர்க்க எண்ண தாண் வழி?

Friday, July 11, 2008

Eggless, ghee less cake.

I bought pilsbury cake mix in deparment stores to make a cake in my house.

Me and saritha decided to make a cake. Last week week we tried a cake, which gave a

dissapointed result. This time also we were hope less to prepare new cake.



We downloaded recipie from the utube. It was a very simple recipie.



The following are the things we used to bake a cake.



1. Pilsbury cake mix.

2. 330ml of Moutain due.

3. Tutty fruity 4 colors.





We mixed the poweder with mountain due drink and made paste and added

Tutty fruit.



Put it in a mircowave glass bowl. With pre-programmed option in our microwave

for cake, we baked it for ~10 minutes.



We were surpised by a tasty cake. We gave it to all our neighbours and enjoyed.

Tuesday, May 27, 2008

கல்யாண கனவு

கல்யாணம் என்றால் அனைவருக்கும் சந்தோசம் தான். ஆனால் எவ்வளவு பேர் மகிழ்ச்சியாக வாழ்கிறோம்?

ஒரு குழந்தை பிறந்தவுடன் அதன் கல்யாணம் பற்றி யோசனை செய்கிறார்கள்.

சிலர் பெற்றோர்கள் சொல் படியும், சிலர் தானே முடிவு செய்கிறார்கள். கல்யாணத்தில் அப்படி என்ன ஈர்ப்பு? நமக்கு என்று ஒரு துணை? உடல் உறவுக்கா?எந்த காரணத்திற்கு கல்யாணம் செய்தாலும், நிம்மதியாக வாழ்கிறோமா என்பது தான் முக்கியம்.

இந்த காலத்தில் வரதட்சனையை பெரிதாக இல்லை என்பதால், அதன் மூலம் பிரச்னை வருவது குறைவு தான்.


காதல் திருமணம் செய்தாலும், பெற்றோர்கள் செய்த கல்யாணம் ஆனாலும், இருவரும் ஒன்றாக வாழும் போதுதான்

சிறு சிறு பிரச்சனைக்கும் சண்டை வரும். இருவருக்கும் அநியொந்யம் வர இரண்டு வாருடங்கள் ஆகும்.

ஒருவர் தவறை இன்னொருவர் சொல்லி, தவறை திருத்தி இருவரும் சந்தோஸ்மாக வாழ்வதே சிறப்பானது.


இருவருக்கும் மன ஒற்றுமை வாரத்ற்கு பல காரணங்கள் இருக்கும்.


1. நான் என்ற அகங்காரம்,
2. பொறுமையின்மை.
3. சகிப்புதன்மை இல்லாமை.
4. முன் கோபம்
5. தான் தாய் தந்தை குடும்பமே சிறந்தது என்பது.
6. அதற்கே முக்கியத்துவம் கொடுத்தல்.



மன ஒற்றுமை வர

வாழ்க்கை துணை இடம் அன்பு செலுத்துதல் - unconditional love

துணைக்கு முதல் இடம் கொடுக்க வேண்டும், அவள் தான் வாழக்கை கடைசி வரை வரும் உறவு.

கஸ்டப்படும் போது சிறு சிறு உதவி செய்ய வேண்டும், மாதவிடாய் காலங்களில் வீட்டு வேலைக்கு
உதவி செய்ய வேண்டும்,

இருவரும் நன்கு உடற்பயிற்சி செய்து,உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒத்த மன நிலை வந்த உடன் யோகம் மற்றும் தியானம் செய்து வாழ்வில் நோக்கை அடைய வேண்டும்.



இவ்வாறு செய்ய அன்பும் அணியோனியம் பெருகும்.இந்த நிலையில் குழந்தை பெற்றால்
குழந்தை ஆரோகியமாகவும் மன வலிவும் பெற்று இருக்கும். நன்றாக படிக்கும்.
நீங்கள் இந்த சமுதாயத்திக்கு நல்ல குழந்தை கொடுத்த சந்தோசம் இருக்கும்.

அப்படி இல்லாமல் ஆரோகியம் இல்லாத குழந்தை பெற்று, அடிக்கடி மருத்துவரிடம்
சென்று உங்கள் நிம்மதி கெடுத்து, வேலை கெடுக்க நேரிடும்.




எனது நண்பர் ஒருவருக்கு கல்யாணம் ஆனது. அவருக்கோ பண கஸ்டம்.
மன பெண்ணோ வசதி படைத்தவர். என் நண்பன் தனது சூழ்நிலையை விளக்கினான்.
திருமணம் நடந்தது.அந்த பெண்ணோ தனது மாமனார் மாமியாரை, தாய் தந்தை போல்
கவனித்தாள். வேலைக்கு செல்லும் போது தனது டெபிட் கார்ட் ஐம், பணத்தையும் கணவரிடம் கொடுத்து
கடனை அடைக்க சொன்னாள்.இந்த மாதிரி மனைவி அமைந்தால் வாழ்க்கை சந்தோசமெ.



மற்றொரு நண்பர், இதை போலவே கல்யாணம் செய்தார். அவர் மனைவியோ
மாமனார் மாமியாரைகொஞ்சம் கூட மதிக்க் வில்லை. வீட்டுக்கு வந்தால் அன்பு இல்லாமல்
மனத்தை புண்படுத்தி வந்தாள்.இதனால் கணவன் மனைவிடம் ஒரே சண்டை.
குழந்தை பிறந்த பின் மாமனார் மாமியாரையும் உறவினரை கூட இருக்க அனுமதிக்க வில்லை.
நண்பர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.அவர் மன நிம்மதி இழந்தார்.


ஒன்று புரிகிறது, வாழ்க்கை துணை இடம் நமக்கு பாசம் உள்ளதோ இல்லையோ,

அவர் மேல் கருணைஇருக்க வேண்டும். அவருக்கு துன்பம் வந்தால் உதவி செய்ய வேண்டும்.
அவர் மேல் வெறுப்பு இல்லாமல் நாம் கடமையை செய்ய வேண்டும்.
மற்றவரிடம் உள்ள குறையை சரி செய்ய வேண்டுமே தவிர, அதை வைத்து பிரச்னை செய்ய கூடாது.



ஒரு நிகழ்ச்சிக்கு செல்கிறோம். அங்கு அனைவரும் ஒன்றாக கூடி சந்தோசமாக இருந்தால்
எவ்வளவுசந்தோசம் இருக்கும். அங்கு கணவன் மனைவிடம் ஒற்றுமை இல்லை என்றால்,
கூட்டம் 2 பிரிவாகும்.சந்தோசமும் குறைக்கிறது.

கணவன் மனைவி சண்டை போட்டு கொண்டு இருந்தால் குழந்தை மன நிலை வெகுவாக பாதிக்கும்.
அவன் எதிர்காலம் சிறப்பாக இருக்காது.




பொதுவாக எல்லா பிரச்சனைக்கும் அகங்காரம்-EGO தான் காரணம்.

இதை விட்டு எல்லாமே இறைவன்என்று தெரிந்து கொண்டாலெ பிரச்னை வராது.
அதை எப்பொழுதுமே விழிப்புணர்வு இருக்க வேண்டும்.அந்த விழிப்பு சாதாரணமாக வருவது கடினம்.

மனம் அமைதி இருக்க வேண்டும், அது வேண்டுமானால் தியானம் செய்யவேண்டும்.
சிலருக்கு இந்த மன அமைதி இயற்கையாக அமையும்.

தியானம் செய்ய, மனம் அமைதி பெற உடல் ஆரோகியம் தேவை.


உடல் ஆரோகியமாக இருக்க, நல்ல உணவு சாப்பிட வேண்டும். உடற்பயிர்ச்சிசெய்ய வேண்டும்.
உணவு நமது மன


நிலைக்குகாரணியாக உள்ளது. அதனால் சாத்வீக உணவு நல்லது என்று ஞானிகள் கூறி உள்ளார்கள். மாமிசம், கிளங்கு,
பச்சை மிளகாய், மசாலா, வெங்காயம் சத்வீக உணவு அல்ல. அதனால்இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.


குடும்ப வாழ்க்கையில் பல விதமான அனுபவம் பெறுகிறோம்.


1. பெண் தனது புகுந்த வீட்டில் ஏற்படும் நிகழ்வுகள். பொறுப்புடன் இருந்து குடும்பத்தை கவனித்ல்
2. கணவன் மனைவி உறவு மூலம் ஏற்படும் அனுபவங்கள். அன்பு காதல்
3. கர்பினி யாக இருக்கும்போது - பொறுப்பு, பொறுமை, கவனம்
4. குழந்தை பெறும்போது - பொறுமை, சந்தோசம்,
5. வேலைக்கு செல்லும்போது,
6. குழந்தை வளர்த்து பள்ளிக்கு அனுப்புவது - கருணை, அன்பு, பாசம்
7. நன்றாக படிக்க வைப்பது -
8. குடும்பம் சுமை, உறவினருக்கும் நண்பருக்கும் உதவி செய்தும் - ஈகை
9. குழந்தைக்கு மேல் படிப்பிக்கு செலவு - உழைப்பு
10. சொந்த வீடு காட்டுவது, வாகனம் வாங்குதல்.நகை செலவு.
11. குழந்தைக்கு வேலை, கல்யாணம்.பேரன்.


இவ்வளவு அனுபவம் கல்யாணம் பண்ணாத நபருக்கு வரும் என்று சொல்ல முடியாது.
இதை எல்லாம் நான் தான் செய்கிறேன் என்று நின்பவர்கள் மனத்தில் சந்தோசம் இருப்பது
இல்லை. இறைவன் தான் எல்லா செயலுக்கு காரணம் என்று நினைத்தால் வாழக்கை சந்தோசம் தான்.
இத்தனை அனுபவங்கள் இறைவனை அறிய என்பதை மறுக்க முடியாது.





தான் தனது என்று அவர் அவரை கூத்தாட்டுவானாகி நிண்றாயே - மாணிக்கவாசகர்.















Wednesday, May 21, 2008

Thoughts for healthy living

Since life goes very fast, we don't find time to do requires activities in our life.
Most of us follow habits which will end up in some problems.


Prevention is better than cure.

Here are some habits we need to follow.

1. Wake up early in the morning.

2. Clean the stomach. Brush the teeth. Keep your mind in the activities we do.

3. Drink minimum of 500 ml of water in the empty stomach.

4. Do some exercise which regulates blood,heat and air circulation in our body.
Walking, Yoga.
http://www.vethathiri.org/SimplifiedPhysicalExercise/

5. Do some breathing exercises or mediation which keeps mind fresh.
http://www.artofliving.org/Spirituality/SudarshanKriya/tabid/195/Default.aspx

6. Take bathe - daily head bathe is also keep the hair clean.

7. Avoid having coffee/tea. We can have herbal tea or coffee.

8. Take breakfast which includes more vegetables fruits and easy to digest.

Leave 1/4 of stomach empty.

9. Have juice, fruit bowls.

10. Don't keep filling stomach. Some time when we are idle,

we keep eat something to pass the time.

11. Include more green vegetables, spinach, Dal(paruppu), rasam, butter milk
instead of curd. Eat less rice and more vegetables. Avoid having animal foods.
12. Dinner at 8-9 pm. Have food that gets digested easily.

13. Drink water and do 5 minutes prayer before going to sleep.
Sleep before 11pm to get up early.




-- Must know the goal of the life and keep proceeding towards it.